கணித்தமிழ் பேரவை பயிலரங்கம்

கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப்பேரவை இன்று பயிலரங்கை நடத்தியது. இதில் பல துறைசார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு கணினி சார்ந்து மாணவர்கள் வலைத்தளத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகளை அறிந்து கொண்டார்கள். பயிற்றுநர்களாக பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்களும் கே.எஸ்.ஆர்.மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.குணசீலன் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.

எடிசனின் தொழிற்சாலை








எடிசனின் கண்டுபிடிக்கும் தொழிற்சாலை

அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி மாகாணத்தில் இருந்த எடிசனின் கண்டுபிடிப்பு தொழிற்சாலையில் (Invention Factory) மொத்தம் பதினான்கு தொழிற்கூடங்கள் இருந்தன. சுமார் ஐயாயிரம் பேர் வேலை செய்து வந்தார்கள். அதில் முதன்மைத் தொழிற்சாலை மட்டும் மூன்று கால்பந்து மைதானம் அளவுக்குப் பெரியது. “பல ஆயிரம் அமெரிக்க டாலர்களை மூலதனமாகப் போட்டுத் தொடங்கப்பட்ட தொழிற்சாலை இது. அதனால் பத்து நாளைக்கு ஒரு புதிய கண்டு பிடிப்பு உற்பத்தி செய்தே ஆகவேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய கண்டுபிடிப்பு உற்பத்தி செய்யப்பட வேண்டும்” என்று எடிசன் இலக்கு நிர்ணயித்துக் கொண்டார் .
இதுவே அவரின் கண்டுபிடிப்பு சாதனைகளுக்கு காரணமாக அமைந்தது. நாம் ஆறு மாதங்களுக்குள் அல்ல நம் வாழ்நாளில் இறப்புக்கு முன்னாவது பலவற்றைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொள்வோமா? (நன்றி - விகடன் பிரசுரம்)

தமிழகத்தின் சாபக்கேடு

நாம் நியாயமான, அடிப்படையான நமதுரிமைகள் பேசினால் கூட அது யாரோ ஒருவர்க்கு எதிர் குற்றச்சாட்டு ஆகிறது

நாம் வணங்கும் கடவுளை எம் தாய்மொழியில் தொழவேண்டுமென்றால்
அது வடமொழிக்கு எதிராகிறது.
எம் தாய்மொழியில் எமக்குப் பொருள் புரியும் இசை வேண்டுமென்றால்
அது தெலுங்குக்கு எதிராகிறது.
எம் மாநிலத்தில் மைய அரசு அலுவலகங்களிலும் மக்களுக்குப் புரியும் வகையில் எம் தாய்மொழியில் ஆட்சி நடைபெற வேண்டுமென்றால்
அது இந்திக்கு எதிராகிறது.
எம் தாய்மொழியில் கல்வி வேண்டுமென்றால்
அது ஆங்கிலத்திற்கு எதிர் என்கிறார்கள்.
குறளின் பெருமை பேசினால்
அது கீதைக்கு எதிர் என்கிறார்கள்.
பேரா.வா.செ.குழந்தைசாமி


எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ் மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்த நல் அமுது!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்!
தமிழ் எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவிமேலே!

சங்கநாதம்

சங்க நாதம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பாரதிதாசன்

காந்திஜியின் பொன்மொழிகள்

என்னைக் கவர்ந்த காந்திஜியின் பொன்மொழிகள்

“உங்கள் பள்ளி உண்மையிலேயே ஒரு மாதிரிப் பள்ளியாக
விளங்க வேண்டுமானால் நீங்கள் மாணவர்களுக்குக் கல்வி
புகட்டினால் மட்டும் போதாது. மாணவர்களைச் சிறந்த
சமையல்காரராகவும், துப்புரவுப் பணியாளர்களாகவும்
உருவாக்க வேண்டும்”.

“மக்களுடைய சுகாதாரத்தின் துலாக்கோல் அவர்கள்
பயன்படுத்தும் கழிப்பறைதான்”

“போரில் வீர தீரச் செயல்களுக்காக அளிக்கப்படும்
பதக்கத்தைக் காட்டிலும் ஒரு சிறந்த துப்புரவுப்
பணியாளன் என்பதற்கான பதக்கம்தான் சிறந்தது”

“நீங்களே கைகளில் துடைப்பத்தையும் வாளியையும்
தூக்காதவரை உங்களது நகரங்களும், கிராமங்களும்
அசுத்தமாகத்தான் இருக்கும்”

“கழிப்பறை சுத்தம் செய்வது போன்ற பணிகளே நாட்டை
சுயாட்சிக்கு இட்டுச் செல்லும்”

Photo Gallery