என்னைக் கவர்ந்த காந்திஜியின் பொன்மொழிகள்
“உங்கள் பள்ளி உண்மையிலேயே ஒரு மாதிரிப் பள்ளியாக
விளங்க வேண்டுமானால் நீங்கள் மாணவர்களுக்குக் கல்வி
புகட்டினால் மட்டும் போதாது. மாணவர்களைச் சிறந்த
சமையல்காரராகவும், துப்புரவுப் பணியாளர்களாகவும்
உருவாக்க வேண்டும்”.
“மக்களுடைய சுகாதாரத்தின் துலாக்கோல் அவர்கள்
பயன்படுத்தும் கழிப்பறைதான்”
“போரில் வீர தீரச் செயல்களுக்காக அளிக்கப்படும்
பதக்கத்தைக் காட்டிலும் ஒரு சிறந்த துப்புரவுப்
பணியாளன் என்பதற்கான பதக்கம்தான் சிறந்தது”
“நீங்களே கைகளில் துடைப்பத்தையும் வாளியையும்
தூக்காதவரை உங்களது நகரங்களும், கிராமங்களும்
அசுத்தமாகத்தான் இருக்கும்”
“கழிப்பறை சுத்தம் செய்வது போன்ற பணிகளே நாட்டை
சுயாட்சிக்கு இட்டுச் செல்லும்”
காந்திஜியின் பொன்மொழிகள்
3:12 AM
முனைவர் சி.ரா.சுரேஷ்
Posted in
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "காந்திஜியின் பொன்மொழிகள்"
Post a Comment